வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு 'சீல்'


வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்
x

அரியலூர் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அரியலூர்

நிலுவை தொகை

அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதை ஏலம் எடுத்தவர்கள் பலர் வாடகை செலுத்தாமல் நிலவை வைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கமிஷனர் சித்ரா சோனியா பலமுறை அவர்களுக்கு கடிதம் அனுப்பியும், நேரில் சென்று தகவல் தெரிவித்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வந்தனர். இதையொட்டி ஒரு சிலர் தங்களது வாடகை நிலுவை தொகையை செலுத்தினர். இருப்பினும் 10-க்கும் மேற்பட்டோர் வாடகையை செலுத்தாமல் இருந்தனர்.

2 கடைகளுக்கு 'சீல்'

இதையடுத்து, அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். அப்போது கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சி சார்பில் ஏலம் விட்ட கடைகளை விட இரு மடங்கு கடைகள் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு வாடகை தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏலம் எடுத்து கடை நடத்துபவர்களை தவிர மற்ற கடைகளை முழுவதுமாக அகற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கான பணிகளை உடனே செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் வாடகை செலுத்தாத கடைகள் அனைத்தும் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story