2 பாம்புகள் பிடிபட்டன

நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பிடிப்பட்டன.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 27). இவருக்கு சொந்தமான நிலத்தில் 2 பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தன.
இதைப் பார்த்த அவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பாம்புகளை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
பாம்புகள் பின்னி பிணைந்திருந்த காட்சியை அப்பகுதி இளைஞர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





