ஒரே இடத்தில் 2 பாம்புகள் பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே ஒரே இடத்தில் 2 பாம்புகள் பிடிபட்டன.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் அருகே இரண்டு பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மற்றும் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஆகிய இரண்டு பாம்புகளை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் பாம்புகளை விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





