2 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

2 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசனின் மகன் ரோஹித் ராஜ்(வயது 14). இவன் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில், அவனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் (22), திருநகரை சேர்ந்த அய்யனார் (23) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் ஆகிய 5 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இதில் சீனிவாசன், அய்யனாரை திருச்சி மத்திய சிறையிலும், 3 சிறுவர்களை இளம்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் சீனிவாசன், அய்யனார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று சீனிவாசன், அய்யனார் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.


Next Story