அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் சன்னரக டன் நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி பாமணி, ராஜகோபாலபுரம், அரவத்தூர், ஆதனூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் 157 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.. பின்னர் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 வேன்களில் ஏற்றினர். இதை தொடா்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.


Next Story