கார், ஆட்டோவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கார், ஆட்டோவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

களியக்காவிளை அருேக வெவ்வேறு இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

களியக்காவிளை அருேக வெவ்வேறு இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் அதிகாரிகள் குழித்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.

அதிகாரிகள் அந்த காரை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று திருத்துவபுரம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். உடனே காரை சாலைேயாரம் நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். அதிகாரிகள் காரை சோதனை செய்த போது அதில் மூடைகளில் சுமார் 1½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அரிசியுடன் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் பனச்சமூடு பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் அதிகாரிகளை கண்டதும் ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்த அரிசியுடன் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், கார், ஆட்டோவை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.


Next Story