2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் போலீசார் நேற்று டவுன் மற்றும் பேட்டை பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது நெல்லை குற்றாலம் ரோட்டில் ஒரு கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41 மூடைகளில் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டையை சேர்ந்த முன்னா முகமது (வயது 30) என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story