மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்; டிரைவர்கள் கைது


மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்; டிரைவர்கள் கைது
x

மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்; டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

வடகாடு போலீசார் அருகேயுள்ள புளிச்சங்காடு, கைகாட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரவுண்டானா பகுதியில் டிராக்டர்களில் சாண்டு மண் அள்ளி வந்த 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் டிரைவர்கள் தஞ்சை மாவட்டம் செட்டிகொல்லை நெய்வேலி பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 29), ஆவணம் பெரியநாயகி புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story