மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்கள் பறிமுதல்

ஆற்காடு அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே புதுப்பாடி அண்ணா நகர் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது 2 வேன்களில் மணல் கடத்துவதற்காக ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து 2 வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





