ஓடும் பஸ்சில் பயணியிடம் சங்கிலியை பறித்த 2 பெண்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு


ஓடும் பஸ்சில் பயணியிடம் சங்கிலியை பறித்த 2 பெண்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு
x

ஓடும் பஸ்சில் பயணியிடம் சங்கிலியை பறித்த 2 பெண்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூருக்கு நேற்று மாலை ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது எசனை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு பெண் பயணியின் அருகே இருந்த 2 பெண்கள் சேர்ந்து தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனை கண்ட அந்த பெண், சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து, அவர்களிடம் இருந்து சங்கிலியை கைப்பற்றி பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தார். பின்னர் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். அந்த பெண் பயணி புகார் தராததால், அந்த 2 பெண்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story