செல்போன் -பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது


செல்போன் -பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
x

செல்போன் -பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையை சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் (வயது 44) என்பவர் செல்போனில் அவரது நண்பர்களுடன் பேசி உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வி.எம்.சத்திரம் அருகே வருமாறு செல்போனில் தகவல் வந்ததும் அங்கு சென்ற செந்தாமரைகண்ணனிடம் இருந்து ரூ.400 மற்றும் 2 செல்போன்கள், ஒரு கைக்கடிகாரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சிலர் பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து செந்தாமரைகண்ணன் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செய்துங்கநல்லூரை சேர்ந்த அருணாச்சலம் (33), குணசேகரன் (21) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story