ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது


ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு களக்காடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி கடத்தி வந்த வழக்கில் நெல்லை அருகே நம்பிதலைவன்பட்டயபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நாகஅர்ஜூன் (வயது 27) என்பவரை தேடி வந்தனர். அதே போல் சங்கரன்கோவில் பகுதியில் நடந்த சோதனையில் ரேஷன் அரிசி கடத்தி வந்த வழக்கில் சங்கரன்கோவில் ஓடைத்தெருவை சேர்ந்த உதயபிரகாஷ் என்ற உதயாவை (26) தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று புதிய பஸ்நிலையம் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story