பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது
x

ஆற்காடு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள காவனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் என்கிற சக்திவேல் (வயது 24). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் நட்பாக பழகி தவறாக நடந்துள்ளதாகவும், இதனால் மாணவி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் அசோக் (20) என்ற வாலிபரும் மாணவியை வெளியில் அழைத்துச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசில் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். இதனை அடுத்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிரு செய்து மோகன்தாஸ், அசோக் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

1 More update

Next Story