லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி

வேலூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
லாரி மீது மோதல்
வேலூரை அடுத்த இறைவன்காடு காட்டுக்கொல்லை, கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் பழனி (வயது 28). விரிஞ்சிபுரம் பஜார்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பிரபாகரன் (26). பழனி, பிரபாகரன் ஆகிய இருவரும் செதுவாலையில் உள்ள ஒரு பொக்லைன் கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் லாரி ஒன்று சென்றது. பொய்கை அருகே லாரி சென்றபோது எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் மோட்டார்சைக்கிள் மோதியது.
2 வாலிபர்கள் பலி
இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வருவதற்குள் பழனி, பிரபாகரன் ஆகியோர் இறந்து விட்டனர். போலீசார் விபத்து நடந்த இடத்தை பாரை்வையிட்டு விசாரணை நடத்தியபின் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.