மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
x

பொன்னை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை

பொன்னை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 வாலிபர்கள் பலி

பொன்னை அருகே உள்ள காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. அவரது மகன் சூர்யா (வயது 20). தர்மராஜா கோயில் தெரு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் பிரபாகரன் (17).

இவர்கள் இருவரும் நேற்று இரவு சோளிங்கர்-சித்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

சூர்யா மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். பிரபாகரன் பின்னால் அமர்ந்து சென்றார்.

பொன்னை குமரகுண்டா கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் சூர்யா, பிரபாகரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொன்னை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story