2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

வீரவநல்லூர் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர்கள் உக்கிரபாண்டி (வயது 20), மந்திரகுமார் என்ற சீதாராமன் (22). இவர்கள் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதால் இவர்களை வீரவநல்லூர் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று உக்கிரபாண்டி, மந்திரகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

1 More update

Next Story