சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில்  கொரோனாவுக்கு 20 பேர் பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிக்கப்பட்டனர்

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 20 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்றும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 பேர், வாழப்பாடியில் 4 பேர், ஆத்தூரில் 3 பேர், சங்ககிரி, சேலம் ஒன்றியம், மேச்சேரி, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தர்மபுரியில் இருந்து வந்த 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story