தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 28 Oct 2022 6:45 PM GMT (Updated: 28 Oct 2022 6:45 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு மகிளா கோர்ட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

திண்டுக்கல்

சிறுமி பலாத்காரம்

ஒட்டன்சத்திரத்தை அடுத்த இடையக்கோட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

சிறை தண்டனை

இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முருகேசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


Next Story