வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை


வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 9 Sep 2023 12:30 AM GMT (Updated: 9 Sep 2023 12:30 AM GMT)

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.அதில் குற்றம்சாட்டப்பட்ட சரவணக்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், இந்திய தண்டனை சட்டம் 366-ன் (கடத்தல்) கீழ் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story