ரூ.200 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு


ரூ.200 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு
x

ரூ.200 கோடி வட்டி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

விருதுநகர்

ரூ.200 கோடி வட்டி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

வட்டியில்லா பயிர் கடன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தமிழக அரசின் வட்டி இல்லா பயிர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மூலம் ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடன் பெறும் முறை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.32.5 கோடிக்கு பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. வட்டி இல்லா பயிர் கடன் பெற்று பயனடைய அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது. கடன் தேவை உள்ள விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர்அடங்கல் சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர் கடன் பெறலாம்.

கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிர் கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுக்கடன் சங்கங்களில் ரூ. 100 செலுத்தி புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர் கடன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story