அரவைக்காக 2,000 டன் நெல்


அரவைக்காக 2,000 டன் நெல்
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 6:45 PM GMT)

நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து 157 லாரிகளில் நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் தென்காசிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story