அரவைக்காக 2,000 டன் நெல்


அரவைக்காக 2,000 டன் நெல்
x
தினத்தந்தி 11 March 2023 7:00 PM GMT (Updated: 11 March 2023 7:01 PM GMT)

தஞ்சையில் இருந்து ஈரோட்டுக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,000 டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story