இலங்கை சிறைபிடித்த 51 மீனவர்கள்-114 படகுகளை விடுவிக்க வேண்டும் பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்


இலங்கை சிறைபிடித்த 51 மீனவர்கள்-114 படகுகளை விடுவிக்க வேண்டும் பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
x
தினத்தந்தி 2 Jan 2017 7:51 AM GMT (Updated: 2 Jan 2017 9:27 AM GMT)

இலங்கை சிறைபிடித்த 51 மீனவர்கள்-114 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடிக்கு  ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட படகுகள் இலங்கை யின் அரசுடைமை ஆக்கப் படும் என  அந்நாட்டு மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீரா தெரிவித் துள்ளார். அதே கருத்தைதான் இலங்கை வடக்கு மாகாண மந்திரி பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரனும் கூறியுள் ளார்.இந்தியா- இலங்கை மீன்வளத்துறையினர் சந்தித்து பேசும் இத்தருணத் தில் இது மிகவும் துரதிருஷ்ட வசமானது.

எங்களது பெருமதிப்பிற் குரிய தலைவர் மறைந்த முதல்-அமைச்சர்  புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இலங்கை   கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்று பலதடவை வலியுறுத்தி உள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப் பாட்டில் தமிழக மீனவர்கள் 114 படகுகள்   உள்ளன. அவற்றை விடுவிக்க வேண் டும்  என ஜெயலலிதா வலியுறுத்தினார்.  இதே கருத்தைதான் கடந்த 31-ந் தேதி இந்தியா- இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தினோம்.பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகு கள் அரசுடைமை ஆக்கப் படும் என்ற இலங்கை மந்திரி களின் அறிவிப்பு துரதிர்ஷ்ட வசமானது மற்றும் தேவை யற்றது. இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இலங்கை மந்திரி களின் இத்தகைய அறிவிப்பு பல நூற்றாண்டுகளாக பாக்ஜலசந்தி  பகுதியில் பாரம்பரிமாக மீன்பிடிக் கும் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் செயலாகும்.

எனவே   மத்திய அரசு இதில் தலையிட்டு இலங்கை கடற்படையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 114 படகுகளையும், 51 மீனவர் களையும் விடுதலை செய்ய நடவடிக்கை  மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Next Story