‘தி.மு.க. என்றைக்கும் மாற்றுத்திறனாளிகளின் பக்கம் நிற்கும்’; மு.க.ஸ்டாலின் அறிக்கை


‘தி.மு.க. என்றைக்கும் மாற்றுத்திறனாளிகளின் பக்கம் நிற்கும்’; மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 4 March 2017 7:45 PM GMT (Updated: 4 March 2017 7:44 PM GMT)

சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சென்னை,

மாற்றுத்திறனாளிகள் மீது நீங்கா பற்றும், பாசமும் வைத்திருப்பவர் தலைவர் கருணாநிதி. தி.மு.க. ஆட்சியில் தன் தலைமையிலேயே தனித்துறையை மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கி, அவர்களுக்கு இந்தப் பெயரும் சூட்டி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு சிறக்க பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதை யாரும் மறந்துவிட முடியாது.

மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் என்றதும் தனது காலை உணவைக்கூட அருந்தாமல் ஓடோடிச்சென்று அவர்களை சந்தித்த தலைவர் கருணாநிதியின் தலைமையில் உள்ள தி.மு.க. என்றும் மாற்றுத்திறனாளிகளின் பக்கம் நிற்கும். ஆகவே மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசுவது தி.மு.க.வுக்கு என்றைக்கும் உடன்பாடானது அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில் என்னை நேரில் சந்தித்த ராதாரவி தான் அவ்வாறு பேசியதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். தி.மு.க.வை எப்போது விமர்சிக்கலாம் என்று காத்திருப்போருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிடாத வகையில் பொதுமேடைகளில் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்லுமாறு தி.மு.க. நிர்வாகிகளையும், தலைமைக்கழக பேச்சாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story