போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பதவி மாற்றம் சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம்


போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பதவி மாற்றம் சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம்
x
தினத்தந்தி 13 Jun 2017 10:45 PM GMT (Updated: 13 Jun 2017 7:16 PM GMT)

சென்னையில் புதிய துணை கமிஷனர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றிய 21 பேருக்கு சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு கொடுத்து கடந்த வாரம் அரசு உத்தரவிட்டது. அவர்களில் ஜி.ஸ்டாலின், டி.அசோக்குமார், ஆர்.பாண்டியராஜன், சி.சியாமளாதேவி, எம்.கிங்ஸ்லின், எஸ்.அரவிந்த் ஆகிய 6 பேருக்கும் நேற்று பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு மேலும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சி.சியாமளாதேவி

1. ஜி.ஸ்டாலின் - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை (ஓ.சி.ஐ.யு) அமைப்பு சார்ந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. டி.அசோக்குமார் - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ஆர்.பாண்டியராஜன்- சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, ஈரோடு சிறப்பு அதிரடி படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

4. சி.சியாமளாதேவி - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. எம்.கிங்ஸ்லின் - இவரும் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

6. எஸ்.அரவிந்த் - சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ள இவர், மாநில உளவுப்பிரிவின் (ஸ்பெஷல் டிவிஷன்) உளவுப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

7. ஆர்.சக்திவேல் - மாநில உளவுப்பிரிவு (ஸ்பெஷல் டிவிஷன்) சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. ஏ.சரவணன் - திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், மதுரை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

டாக்டர் எம்.சுதாகர்

9. அனில்குமார் கிரி - அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

10. டாக்டர் எம்.சுதாகர் - சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பதவி வகிக்கும் இவர், இனிமேல் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக செயல்படுவார்.

11. கே.பெரோஸ் கான் அப்துல்லா - சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருநெல்வேலி குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

12. எம்.சத்யபிரியா - தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக இருக்கும் இவர், சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

13. டாக்டர் அபினவ் குமார் - சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றுகிறார். இவர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்டவாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story