விமர்சிப்பது ஏன் என்பதை கமலிடம் தான் கேட்க வேண்டும் முதல்-அமைச்சர் பழனிசாமி


விமர்சிப்பது ஏன் என்பதை கமலிடம் தான் கேட்க வேண்டும்  முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 16 Aug 2017 6:42 PM IST (Updated: 16 Aug 2017 6:41 PM IST)
t-max-icont-min-icon

தொடர்ச்சியாக விமர்சிப்பது ஏன் என்பதை கமலிடம் தான் கேட்க வேண்டும் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கடலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை  முதல்-அமைச்சர் பழனிசாமி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அதனை தொடர்ந்து அவர்  செய்தியார்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தில் நல்லது நடக்கும்.  குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கடுமையான வறட்சி இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். தொழிதுறை, விவசாயத்துறை முன்னுரிமை அளிக்கப்படும். யாரைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக விமர்சிப்பது ஏன் என்பதை கமலிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story