வரும் 20-ம் தேதி தினகரனுடன் சேர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவை சந்திக்க முடிவு -தங்க தமிழ்செல்வன்


வரும் 20-ம் தேதி தினகரனுடன் சேர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவை சந்திக்க முடிவு -தங்க தமிழ்செல்வன்
x
தினத்தந்தி 16 Sep 2017 8:26 AM GMT (Updated: 16 Sep 2017 8:26 AM GMT)

வரும் 20-ம் தேதி தினகரனுடன் சேர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தங்க தமிழ் செல்வன் எம்.எல்.ஏ கூறினார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் 20-ம் தேதி தினகரனுடன் சேர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளோம். ஜெயலலிதாவின் ஆன்மா  பழிவாங்கினால் முதலில் பாதிக்கப்படுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாகத்தான் இருப்பார். கட்சிதான் எங்களுக்கு முக்கியம் ஆட்சியை பற்றி கவலையில்லை.ஆட்சியைக் கலைத்துவிட்டுத்தான் ஊருக்கு வரவேண்டும் என தொகுதி மக்கள் கட்டளையிட்டு உள்ளனர் என கூறினார்

Next Story