ஸ்கூட்டரில் மகனுடன் சென்ற பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு


ஸ்கூட்டரில் மகனுடன் சென்ற பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2017 10:15 PM GMT (Updated: 24 Oct 2017 1:52 PM GMT)

சென்னை வடபழனி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ரேவதி (வயது 55). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகனுடன் ஸ்கூட்டரில் எழும்பூர் வந்தார். பின்னர் அதே ஸ்கூட்டரில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சென்னை,

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் வரும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் ரேவதியை தாக்கி கீழே தள்ளினார்கள். அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் ரேவதியின் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் கொள்ளை வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story