அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை மைத்ரேயன் எம்.பி., கருத்தால் சர்ச்சை


அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை மைத்ரேயன்  எம்.பி., கருத்தால் சர்ச்சை
x
தினத்தந்தி 21 Nov 2017 6:06 AM GMT (Updated: 21 Nov 2017 6:06 AM GMT)

அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை என்கிறரீதியில் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க 2 அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை ஒதுக்குவது என பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்ற, ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் இரு அணிகளும்  இணைந்தன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்துவருகின்றனர். அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்து இன்றுடன் 3 மாதங்களாகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன், அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  தனது பேஸ்புக்கில், 'ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றுள்ளன. 'மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன் மழை பாதிப்புகளைப் பார்வையிட வரும்போது, அதுகுறித்து அமைச்சர்கள் தகவல் தெரிவிப்பதில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.

Next Story