வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் திரும்பி சென்றார், திவாகரன்


வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் திரும்பி சென்றார், திவாகரன்
x
தினத்தந்தி 21 Nov 2017 9:00 PM GMT (Updated: 21 Nov 2017 7:35 PM GMT)

விசாரணை நடத்த வேண்டிய அதிகாரிகள் இல்லாததால் திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் திவாகரன் திரும்பி சென்றார்.

திருச்சி

திருச்சியில் உள்ள வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜர் ஆகும்படி சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆஜராகவில்லை

இதற்காக அவர் கடந்த வியாழக்கிழமை திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று அவர் ஆஜர்ஆகவில்லை.

நேற்று திவாகரன் ஆஜர் ஆக வருகிறார் என கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி வில்லியமஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஆனால் மதியம் 2 மணி வரை திவாகரன் அங்கு வரவில்லை.

திரும்பி சென்றார்

இதுபற்றி விசாரித்த போது மன்னார்குடியில் இருந்து புறப்பட்ட திவாகரன் திருச்சிக்கு வந்து திருவானைக்காவல் பெரியார் நகரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்தார். திருச்சி வருமான வரி அலுவலகத்தில் திவாகரனிடம் விசாரணை நடத்த வேண்டிய அதிகாரிகள் முக்கிய பணி காரணமாக கோவைக்கு சென்று விட்டதால் திவாகரனை வேறு தேதியில் ஆஜர் ஆகும்படி கூறிவிட்டார்களாம். இதனை தொடர்ந்து திவாகரன் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகாமல் மீண்டும் மன்னார்குடிக்கே திரும்பி சென்று விட்டார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இன்று அல்லது நாளை திவாகரன் திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

Next Story