பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். #tamilnews | #latesttamilnews
சென்னை,
பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
எழுத்தாளர் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞானி. ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story