தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்


தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
x
தினத்தந்தி 16 May 2018 11:42 PM GMT (Updated: 16 May 2018 11:42 PM GMT)

தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது:-

1. எம்.ஸ்ரீஅபினவ்-தக்கலை உதவி சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. என்.எஸ்.நிஷா-சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

3. இ.சாய்சரண் தேஜஸ்வி- குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்கிறார்.

4. ரவளி பிரியா கந்தபுனேரி- திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

5. எஸ்.செல்வநாகரத்தினம்- தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. கே.பிரபாகர்- ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

7. எஸ்.எஸ்.மகேஸ்வரன்- திண்டுக்கல் அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராஜபாளையம் சிறப்புக் காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

8. வி.ஷியாமளாதேவி- பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை கூடுதல் கமிஷனராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சி.ஷியாமளாதேவி- சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனரான இவர், மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

10. பர்வேஸ்குமார்- சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

11. எஸ்.சாந்தி- மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

12. பி.சாமுண்டீஸ்வரி- தமிழ்நாடு போலீஸ் அகாடமி சூப்பிரண்டான இவர், சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. ஜி.ஷாசங்க் சாய்- சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனரான இவர், அடையாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

14. ரோகித் நாதன் ராஜகோபால்- சென்னை அடையாறு துணை கமிஷனரான இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

15. ஜார்ஜி ஜார்ஜ்- சென்னை ரெயில்வே சூப்பிரண்டான இவர், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. பி.ராஜன்- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

17. ஜி.ஸ்டாலின்- சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

18. ஜி.சம்பத்குமார்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. பி.கண்ணம்மாள்- சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

20. எச்.ஜெயலட்சுமி- லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டான இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. சரோஜ்குமார் தாக்கூர்- லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு சரக சூப்பிரண்டான இவர், திருச்சி ரெயில்வே சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

22. ஆன்னிவிஜயா- திருச்சி ரெயில்வே சூப்பிரண்டான இவர், சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

23. என்.தேவராணி- சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டான இவர், சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பதவி ஏற்பார்.

24. இ.எஸ்.உமா- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

25. ஏ.கயல்விழி- திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

26. எஸ்.சக்திகணேசன்- திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக உள்ள இவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. டாக்டர் ஆர்.சிவகுமார்- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

28. ஐ.ஈஸ்வரன்- சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக உள்ள இவர், அம்பத்தூர் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

29. எஸ்.சர்வேஷ் ராஜ்- சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. ஆர்.அந்தோணி ஜான்சன் ஜெயபால்- சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக பணிபுரியும் இவர், சென்னை 2-வது பட்டாலியன் சிறப்பு காவல்படை கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story