உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது தமிழக அரசின் கோரிக்கை ஐகோர்ட் நிராகரிப்பு


உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது தமிழக அரசின் கோரிக்கை ஐகோர்ட் நிராகரிப்பு
x
தினத்தந்தி 24 May 2018 9:26 AM GMT (Updated: 24 May 2018 9:26 AM GMT)

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டை ஐகோர்ட் நிராகரித்தது. #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

சென்னை

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரிக்க உத்தரவிட கோரிய 3 வழக்கறிஞர்கள்  மனு செய்தனர் . அந்த  மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று  விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை இறந்தவர்களின் உடற்கூறு செய்யப்பட்ட உடல்களை பதப்படுத்தி வைக்க  உத்தரவு பிறப்பித்தது மேலும்  பிரதேச பரிசோதனை வந்தவுடன் அதன் தன்மையை பொறுத்து உத்தரவிடப்படும் என கூறினர். 

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதால் உடனடியாக உடல்களை அவர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  அந்த மனு மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். 

இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வருவதையொட்டி  மனுதாரர் தரப்புக்கு தெரியப்படுத்த வேண்டும். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்புவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

பிற்பகல் விசாரணை தொடங்கியதும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது  தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்  உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை?- ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வராததால் உத்தரவை மாற்ற முடியாது என  உயர்நீதிமன்றம் கூறியது

உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதாக தமிழக அரசு முறையீடு செய்திருந்தது.  உறவினர்களின் கடிதங்களையும் தாக்கல் செய்து இருந்தது. இதுவரை 2 பேரின் உடல்களுக்கு மட்டுமே பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது என தமிழக அரசு வாதிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Next Story