சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது


சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 18 April 2019 12:58 AM GMT (Updated: 18 April 2019 12:58 AM GMT)

சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கியது

சென்னை,

தமிழகத்தில் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளிலும் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 6:00 மணிக்கு நிறைவடையும். மதுரையில் மட்டும், காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, இரவு, 8:00 மணிக்கு நிறைவடையும். கூடுதலாக 2 மணி நேரம் மதுரையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அனைத்து ஓட்டு சாவடிகளிலும், காலை, 6:00 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், 50 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு முறையாக செயல்படுகிறதா? என்பது சரிபார்க்கப்பட்டது. மக்களவை தேர்தலுடன், இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் மட்டும், காலை, 5:30 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது.

Next Story