அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த அடுத்த நாள் “ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்” தமிழருவி மணியன் பேட்டி


அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த அடுத்த நாள் “ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்” தமிழருவி மணியன் பேட்டி
x
தினத்தந்தி 18 May 2019 10:45 PM GMT (Updated: 18 May 2019 8:38 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த அடுத்த நாள் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். சட்டமன்ற தேர்தல் வரும்போது, தமிழகம் முழுவதும் அவர் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு, மக்கள் ஆதரவோடு ஆட்சி நாற்காலியில் அமருவார் என்று நம்புகிறோம்.

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்து வைக்கமாட்டார். அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story