சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் மனு


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் மனு
x
தினத்தந்தி 26 Jun 2019 10:57 AM GMT (Updated: 26 Jun 2019 10:57 AM GMT)

தன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

சட்டத்துறை அமைச்சரின் மகன் என தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டு போலீசை தாக்க முயன்றதாக நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

போலீசை தாக்க முயன்றது அமைச்சரின் மகன் என தகவல் பரவிய நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story