கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி


கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 July 2019 2:58 AM GMT (Updated: 11 July 2019 4:54 AM GMT)

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story