வேலூர் பாராளுமன்ற தேர்தல் : ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்


வேலூர் பாராளுமன்ற தேர்தல் : ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்
x

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. ஏ.சி. சண்முகம் மனு தாக்கல் செய்தார்.

வேலூர்,

வேலூர் பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாளாகும்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று காலை 11.40 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, பா.ம.க., தே.மு.தி.க., த.மாகா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர்.

 இவரை தவிர, சுயேட்சையாக போட்டியிடும் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே  3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story