பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு, டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல் விலை தொடர்ந்து  உயர்வு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 15 Nov 2019 1:14 AM GMT (Updated: 15 Nov 2019 1:14 AM GMT)

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.53 ஆகவும், டீசல், விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது. பெட்ரோல் விலை கடந்த 10 நாட்களில் சுமார் ஒரு ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story