ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 ஆம் தேதிகளில் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம்


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 ஆம் தேதிகளில் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:19 AM GMT (Updated: 7 Dec 2019 11:29 AM GMT)

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. 

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை  வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் நடைபெறும்.

* டிசம்பர் 16 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 

* டிசம்பர் 17 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை

* வேட்பு மனுக்களை திரும்ப பெற 19 ஆம் தேதி கடைசி நாளாகும்.

* வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
 

Next Story