எம்.ஜி.ஆர். நினைவு நாள்: 'தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்குவதை தடுப்போம்' அதிமுகவினர் உறுதிமொழி


எம்.ஜி.ஆர். நினைவு நாள்: தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்குவதை தடுப்போம் அதிமுகவினர் உறுதிமொழி
x
தினத்தந்தி 24 Dec 2019 6:37 AM GMT (Updated: 24 Dec 2019 6:37 AM GMT)

எம்.ஜி.ஆரின் 32-வது நினைவுநாளையொட்டி, தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்குவதை தடுப்போம் என எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சென்னை,

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள  அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க, அதனை இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

உறுதிமொழியில், 'தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்குவதை தடுப்போம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களுக்கு நன்மை செய்வது, ஆட்சியை காப்பது, கட்சியை வளர்ப்பது, உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்து கொண்டனர்.



காலை முதலே ஏராளமான அதிமுகவினரும், பொதுமக்களும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Next Story