பாலில் கலப்படமா? அரசு தொடர்ந்து கண்காணிக்கிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்


பாலில் கலப்படமா? அரசு தொடர்ந்து கண்காணிக்கிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2020 10:45 PM GMT (Updated: 4 Feb 2020 11:17 PM GMT)

பாலில் கலப்படம் ஏற்படாமல் தடுக்க அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் பால் வளத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-

இந்தக் கூட்டத்தில் பால்வளத்துறையின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் பால் உற்பத்தியில் உயர்ந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றவேண்டும். ஏற்றுமதி செய்யும் பாலின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், பாலில் கலப்படம் இருக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கண்டிப்புடன் கூறினார். தனியார் பாலில் உள்ள கலப்படம் குறித்து கேட்டால், தனியார் பால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பாலும் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story