டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்


டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்
x
தினத்தந்தி 6 May 2020 10:38 AM GMT (Updated: 6 May 2020 10:38 AM GMT)

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  மனு மீதான வாதத்தின் போது,  "டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது. சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும்.  கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது.மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும்” என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.  

இதையடுத்து,  டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Next Story