கொரோனா சோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு


கொரோனா சோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
x
தினத்தந்தி 14 May 2020 9:54 AM GMT (Updated: 14 May 2020 10:32 AM GMT)

கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை

கொரோனா சோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
  • ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை.
  • மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
  • அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும்.
  • சோதனை உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  •  வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு.
  • கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு.
  •  75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு.

Next Story