சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழப்பு


சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 July 2020 4:06 AM GMT (Updated: 12 July 2020 4:06 AM GMT)

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்துள்ளது.  எனினும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று கொரோனா தொற்றுக்கு 26 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ண்ணிக்கை 69 ஆக இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேர்,   கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 4 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை தலா 3 பேர் தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story