திருவண்ணாமலையில் மேலும்151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


திருவண்ணாமலையில் மேலும்151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 July 2020 10:53 AM GMT (Updated: 12 July 2020 10:53 AM GMT)

திருவண்ணாமலையில் மேலும்151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதலில் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீப நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றுவரை மாவட்டத்தில் 2,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும்151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3075ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Next Story