திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதிய கோரிக்கை


திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதிய கோரிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2020 7:02 AM GMT (Updated: 19 Aug 2020 7:02 AM GMT)

திருச்சியை 2- வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதிய கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

திருச்சி,

தமிழகத்தின் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பதற்காக இரண்டாம் தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் என கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ளதாலும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் மதுரை சரியான இடம் என வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருச்சியை தமிழகத்தின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் எனவும் திருச்சியை 2-வது தலைநகராக்கும் எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம் எனவும் இது தொடர்பாக
முதலமைச்சர், துணை முதலமைச்சரிம் மன்றாடி திருச்சியை 2-வது தலைநகராக்க முயற்சி எடுப்போம் என வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.

மதுரையை 2-வது தலைநகராக்க அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story