நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை


நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை
x

நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை,

நெல்லையில் பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் இருந்து 3 பேர் உடல்களை போலீசார் மீட்டனர்.  அவர்களில் 2 பேர் திருநங்கைகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களின் உடல்கள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் இருந்தன.  முன்விரோதத்தினால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.  இந்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story