தமிழகத்தில் இன்று மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று -சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் மேலும் 5,980- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த பாடில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 5,980 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,73,410- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,420- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 5,603 - டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். . சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






