தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2020 6:19 AM GMT (Updated: 8 Sep 2020 6:19 AM GMT)

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று  காலை 11 மணியளவில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையை 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14,15,16 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. 

Next Story